Thursday, November 5, 2009

ஒரு சுவையான சம்பவம்

ஒரு சுவையான சம்பவம்

திருமணத்திற்கு முன் நான் கணக்கு டியூசன் கொடுத்து வந்தேன். இரண்டு +2 மாணவிகளுக்கு என் அறையில் கணக்கு சொல்லி கொடுத்துக்கொண்டிருந்த நேரம். இரண்டு பேர் மட்டுமே என்பதால், கணக்கை அவர்களுடைய நோட்டு புத்தகத்தில் எழுதி சொல்லிக்கொடுப்பது வழக்கம். இரண்டு பேருக்கும் போட்டி இருக்க கூடாது என்பதால் இரண்டு பேர் நோட்டிலும் மாறி மாறி கணக்கு போட்டு காட்டுவேன். ஒரு முறை, ஏதோ ஞாபகத்தில் ஒரு பெண்ணின் நோட்டில் தொடர்ந்து கணக்கு போட்டு காட்டி விட்டேன். உடனே அடுத்த மாணவிக்கு கோபம் வந்து விட்டது. என்னிடம் சத்தமாக, "என்ன அங்கிள், அவ இதுலயே செஞ்சிகிட்டு இருக்கிங்க. இரண்டு பேர் இதுலயம் மாறி மாறி தான செய்யனும். என்னுடையதிலும் செய்யுங்க. எவ்ளோ நேரம் காட்டிக்கிட்டே இருக்கேன்" என்றாள். இதைக்கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் என்னவோ ஏதோ என்று குழம்பி விட்டார்கள். பக்கத்து வீட்டு நண்பர், கிண்டலாக கேட்டார் "யோவ், என்னய்யா நடக்குது உன் அறையில?"

No comments:

Post a Comment