Monday, November 2, 2009

கோன் ஐஸ்கிரீம்

கோன் ஐஸ்கிரீம்
டீச்சர் ராமுவைக் கேட்டாள்"ராமு! ஒரு மரத்தில் ஐந்து பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன. நான் ஒரு பறவையை சுட்டுவிடுகிறேன். அந்த பறவை இறந்து கீழே விழுந்து விடுகிறது. இப்பொழுது அந்த மரத்தில் எத்தனை பறவைகள் இருக்கும்?"

ராமு சொன்னான் "ஒன்றுமே இருக்காது. ஏன் என்றால் எல்லாம் பறந்து போயிருக்கும்"

டீச்சர் சொன்னாள். "ராமு! சரியான விடை நான்கு. ஐந்தில் ஒன்று போக நான்கு. ஆனால், எனக்கு உன் மூளையை உபயோகித்த லாஜிக் பிடித்திருக்கிறது. குட்"

ராமு சொன்னான். "டீச்சர்! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு பார்க்கில் மூன்று இளம் பெண்கள் கோன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவள் கோனின் பக்கங்களில் வழியும் ஐஸ்கிரீமை நக்கிச் சாப்பிடுகிறாள். மற்றொருவள், கோன் முழுதையும் வாயில் வைத்து முழுங்கப் பார்க்கிறாள். மூன்றாமவளோ, கோன் தலைப் பகுதியை கடித்துச் சாப்பிடுகிறாள். இம்மூவரில், திருமணமான பெண் யார்?"

டீச்சருக்கு வெட்கமாகியது. முகம் சிவந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னாள் "நான் நினைக்கிறேன், அந்த கோன் ஐஸ்கிரீமை முழுதாக வாயில் வைத்து சாப்பிடுபவள் என்று!"

ராமு சொன்னான். "சரியான விடை அம்மூவரில் யார் விரலில் திருமண மோதிரம் அணிந்திருக்கிறார்களோ அவர்கள் என்பதுதான். ஆனால், எனக்கு உங்கள் மூளையை உபயோகித்த லாஜிக் பிடித்திருக்கிறது. குட்!"

No comments:

Post a Comment