Monday, November 9, 2009

தமிழில் காமசூத்ரா 3

தமிழில் காமசூத்ரா
அது ஒரு மாபெரும்ட சக்தி


காதல் செய்வது உயிரியற்கை என்கிறபோது அதைச் சொல்வதற்க்கு ஒரு நூலும் தேவையா என்பது சிலரின் கருத்து. விலங்கு உடலுறவு கொள்கிறது. மனிதனும் உடலுறவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடுமா..? விலங்கு தனது இரையை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம் தேவைப்படுகிறது. அதனால் தானே அவன் உயிரினங்களில் முதலிடம் வகிக்கிறான். அவனுக்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் தான் காமநூல் அவசியப் படுகிறது.


அச்சமும், தயக்கமும் கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ''காமநூல்கள் மருட்சியை ஏற்ப';படுத்தலாம்'' ஆனால் இந்த நூல்களை அவர்கள் அச்சத்திலிருந்தும் தயக்கத்திலிழருந்தும் விடுவிக்கும் காமம் சக்தி வாய்ந்தது. அது கற்றவர்களை காதலில் தேர்ச்சி உடையவராக்கும். மற்றவர்களை பொறுத்தவரை ''மண வாழ்க்கையை நாசம் செய்யும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்.


காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணர்வு வேட்க்கை, மனிதர்கள் வாழ்வில் அது ஒரு யோக சாதனை, காம துறவிகள் விலக்கலாம். ''சம்சாரிக்கு அது முடியாது. சுகத்தை தேடுகிறவன் பாவங்கள் செய்யும்படியாகும். குற்றங்களை புரியும்படி இருக்கும் என்பது மகான்களின் கருத்து. காமவாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தானே நாசம் செய்து விடுவான் என்று அவர்கள் கருதினார்கள்.

போஜர்குல மன்னன் தாண்டக்யன் ஒரு மேல்யாதிப் பெண்ணை கற்ப்பழித்துவிட அதன்விளைவாக அவன் செத்துப் போனான். அவனுடைய நாடு புழுதி காற்றில் காணமல் போயிற்று என்று புரணங்கள் கூறும்.
''இந்திரன் அகலிகையை ஏமாற்றினான். சீசகன் திரளெபதியை இழிவு செய்தான். ராவணன் சீதையை தூக்கி சென்றான். இப்படி தங்கள் பலத்தையும் பிரக்யாதியையும் நம்பிச் செயல் பட்டவர்களெல்லாம் அழிந்து பட்டார்கள். காமம் அவர்கள் கண்ணை மறைத்தது என்பார்கள்.


காமம் கெடுதல் செய்வதில்லை. மனிதனிடம் உள்ள தீய பண்புகள் தான் அவனையும் கெடுக்கின்றன. அவனை சற்றியள்ளவர்களையும் கெடுக்கின்றன. உடலுறவு முக்கியம், உடம்புக்கு உணவு, தண்ணீர் மாதரி உடலுறவு அவசியப்படுகிறது.


காமம் என்பது அர்த்தம். தர்மம் இவற்றின் விளைவு பலன் என்கிறார்'' வாத்ஸ்யாயனர். அச்சம் பாலுறவுக்கு இடையுறாகி விடக்கூடாது.
'' கால் நடைகள் பயிரை மேய்ந்து விடும் என்பதற்காக விவசாயம் செய்யாமல் இருக்க முடியுமா..?''

பிச்சைக்காரனுக்கு பயந்து சமைப்பதை நிறுத்திவிடலாமா..? என்று கேட்க்கிறார் வாத்ஸ்யாயனா. அர்த்தம், காமம், தர்மம் இவற்றை அறிந்தவனும் தனது உடம்பு, மனம், ஆன்மாவில் அவற்றை கடைபிடிக்கிறவனும் இவ்வுலகத்தோடு மறுவுலகிலும் மகிழ்ச்சியாயிருப்பார்.


இளைஞர்கள் கலைகள், அறிவியல் கற்பதுடன் தர்மம், அர்த்தம், காமம், பற்றிய நூல்களையும்கற்று தோச்சி பெற வேண்டும். ''முதலிரவை எதிர் நோக்கியிருக்கும் மணப்பெண் காமசூத்திராவை அறிந்திருக்க வேண்டும்''
என்கிறார் வாத்ஸ்யாயனர்.

தொடரும்....

No comments:

Post a Comment