Monday, November 9, 2009

தமிழில் காமசூத்ரா 7


உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக்கண்ணால் நோக்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார்த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற்றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசியமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள்.

நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன்முறுவலுடன் தலை குனிவாள். பொருளற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பாள்.

அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என்னைப் பார்தர்னா சொல்றீங்.. என்று கேட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்களை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தையையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்தமிடுவாள்.
அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தும்.

ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கைக்குட்டை சூடிய மலர். மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள்களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங்கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள்.
அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணிந்து கொள்வாள். ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழிகள்.

எப்படி வெல்கிறது...?
உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவீடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும். அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும்போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வேண்டும்.
அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள். அவளும் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களுக்களுக்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.

No comments:

Post a Comment